‘அட்ரா சக்க, அட்ரா சக்க, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” போன்ற டைலாக்குகளை கேட்டவுடன் நம் நினைவுக்கு வருபவர் கவுண்டமணி.
உடல்நலக் குறைவு காரணமாக சில காலம் நடிக்காமல் இருந்த கவுண்டமணி ‘வாய்மை' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.
நக்கல், நையாண்டி, கமெண்ட்டுகள் என அன்றே திரைப்படங்களில் சொல்லி இன்றும் ரசிக்கப்பட்டு வரும் கவுண்டமணி ‘49 ஓ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதால் படத்தின் டீஸரை மார்ச் 31ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். மேலும் ஏப்ரல் மாதத்தில் படத்தின் இசை வெளியீடும், மே மாதத்தில் படமும் வெளிவர உள்ளது.
கௌதம் மேனன் உதவியாளராக பணிபுரிந்த ஆரோக்கியதாஸ் இப்படத்தினை இயக்க ஜீரோ ரூல்ஸ் என்டேர்டைன்மென்ட் தயாரிக்கின்றது.
‘49-ஓ’ (49-O) என்பது தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு விதி. இந்த விதியின் நோக்கம் வாக்குச்சீட்டுக்களின் தவறான பயன்பாட்டையும் ஏமாற்றுதல்களையும் தடுப்பதாகும்.
இப்பெயரில் உருவாகிவரும் இப்படம் இப்போதுள்ள விவசாயிகளின்6 பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் காமெடியாக சொல்லும் படமாக அமைய உள்ளது.
ஒரு புறம் நாடாளுமன்ற தேர்தல், மறுபுறம் பிரம்மாண்டமான எதிர்பார்ப்பைக் கூட்டும் படங்கள் என ஏப்ரல் மாதம் சூடு பிடிக்கப் போகிறது.
உடல்நலக் குறைவு காரணமாக சில காலம் நடிக்காமல் இருந்த கவுண்டமணி ‘வாய்மை' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.
நக்கல், நையாண்டி, கமெண்ட்டுகள் என அன்றே திரைப்படங்களில் சொல்லி இன்றும் ரசிக்கப்பட்டு வரும் கவுண்டமணி ‘49 ஓ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதால் படத்தின் டீஸரை மார்ச் 31ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். மேலும் ஏப்ரல் மாதத்தில் படத்தின் இசை வெளியீடும், மே மாதத்தில் படமும் வெளிவர உள்ளது.
கௌதம் மேனன் உதவியாளராக பணிபுரிந்த ஆரோக்கியதாஸ் இப்படத்தினை இயக்க ஜீரோ ரூல்ஸ் என்டேர்டைன்மென்ட் தயாரிக்கின்றது.
‘49-ஓ’ (49-O) என்பது தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு விதி. இந்த விதியின் நோக்கம் வாக்குச்சீட்டுக்களின் தவறான பயன்பாட்டையும் ஏமாற்றுதல்களையும் தடுப்பதாகும்.
இப்பெயரில் உருவாகிவரும் இப்படம் இப்போதுள்ள விவசாயிகளின்6 பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் காமெடியாக சொல்லும் படமாக அமைய உள்ளது.
ஒரு புறம் நாடாளுமன்ற தேர்தல், மறுபுறம் பிரம்மாண்டமான எதிர்பார்ப்பைக் கூட்டும் படங்கள் என ஏப்ரல் மாதம் சூடு பிடிக்கப் போகிறது.
